வழுத்தூர் ஆன்லைன் தமிழ் இணையதளம்

.

மறைவு அறிவிப்பு 11-08-2009 காலை 11.30 மணிக்கு மேல வழுத்தூர் தானாவதி அப்துல் ரசூல் காலமானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்பார்ந்த வழுத்தூர் வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த வழுத்தூர் ஆன்லைன் இணைய தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.
திருமணம், மறைவு மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும் வரவேற்கப்படுகின்றன. வாழ்த்துக்கள், அனுதாபங்கள், சமூக கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவைகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
வழுத்தூர் மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் வட்டார மக்கள் தங்கள் பகுதிகளின் செய்திகளை தெரிந்து கொள்ள உதவுங்கள்.
நம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி


திருக்குர்ஆனை ஓத கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு

ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மைகளை பெற்றுத்தரும் திருமறையினை ஓதத் தெரியாமல் பல சகோதரர்கள் வருத்தப்படுகிறார்கள். இவ்வாறு குர்ஆன் ஓதத்தெரியாமல் இருப்பவர்களுக்காகவும் மற்றும் சிறுவர்களுக்காகவும் துபை நாஸர் சதுக்கத்தில் உள்ள ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் ஹதீத் அலுவலகத்தில் வாரத்தில் 4 நாட்கள் திருக்குர்ஆன் ஓத பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறுவர்களுக்கு - அஸர் தொழுகையிலிருந்து மக்ரிப் தொழுகை வரை உள்ள நேரத்தில் வந்து கற்றுக்கொள்ளலாம்.
பெரியவர்களுக்கு - பஜ்ர் தொழுகைக்கு பிறகு



மேலதிக விபரங்களுக்கு மெளலவி நூருல் அமீன் அவர்களை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் - +971 55 6462745
தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரியப்படுத்துங்கள்...
 

Copyright All Rights Reserved வழுத்தூர் ஆன்லைன் by Mohamed Brother`s