வழுத்தூர் ஆன்லைன் தமிழ் இணையதளம்

.

மறைவு அறிவிப்பு 11-08-2009 காலை 11.30 மணிக்கு மேல வழுத்தூர் தானாவதி அப்துல் ரசூல் காலமானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்பார்ந்த வழுத்தூர் வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த வழுத்தூர் ஆன்லைன் இணைய தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.
திருமணம், மறைவு மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும் வரவேற்கப்படுகின்றன. வாழ்த்துக்கள், அனுதாபங்கள், சமூக கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவைகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
வழுத்தூர் மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் வட்டார மக்கள் தங்கள் பகுதிகளின் செய்திகளை தெரிந்து கொள்ள உதவுங்கள்.
நம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி


மத்திய அரசின் முஸ்லிம்களுக்கான கல்வி உதவி திட்டம்



சென்ற ஆண்டைபோல் மத்திய அரசு இந்த ஆண்டும் சிறுபாண்மை (முஸ்லீம்கள் உட்பட) மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்க உள்ளது, , விண்ணப்ப படிவத்தை இந்த இனையதளத்தில் http://minorityaffa irs.gov.in/ -Download செய்து கொள்ளளாம்,

form1

form2

மேலதிக விளக்கத்திற்க்கு கீழ்காணும் அரசின் அறிவிப்பை பார்க்கவும்,

கவனிக்க வேண்டியவை :

1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி/கல்லூரிகள் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும், நேரடியாக அனுப்பும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

2. விண்ணப்பங்கள் அனுப்பிய அனைவருக்கும் உதவி தொகை கிடைக்காது, தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே உதவி தொகை கிடைக்கும்.

பொதுவான தகவல் :

1. மத்திய அரசின் மூலம் வழங்கபடும் உதவி என்பதால், பல பள்ளிகளுக்கு/ கல்லூரிகளுக்கு, இந்த உதவி தொகை பற்றிய தகவல் அதிகாரபூர்வமாக சென்றிருக்காது, எனவே பல பள்ளிகளில்/கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வாங்க மாட்டார்கள்.

2. ஊழல் அரசு நிறுவனங்களில் மலிந்து இருப்பதால், பொதுவாக இது போன்ற உதவி தொகைகள் உன்மையாக கஷ்ட்டப்படும் மாணவ/மாணவியருக்கு போய் சேராது.

3. மேலும் முஸ்லீம்களுக்கான உதவி தொகை என்பதால், இந்துத்துவா சிந்தனை உள்ள அதிகாரிகள் இந்த உதவி தொகை முஸ்லீம்களுக்கு சென்றுவிடாக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். சில நேரங்களில் இது போன்ற உதவி தொகைகளை அரசுக்கே திருப்பி அனுப்புவதும் உண்டு.
4. சென்ற வருடம் இந்த உதவி தொகை வழங்களில் ஏற்பட்ட குளருபடியை விசாரிக்க நமது மாணவரனி சகோதரர்கள் திருச்சி கலெக்டர் அலுவழகத்தை அனுகிய போது, ஒரு அதிகாரி தெரிவித்த தகவல் : இது போன்ற உதவி தொகைகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் கொள்ளை அடிக்கபடும், உண்மை முஸ்லீம்களுக்கு சென்றடைவதில்லை என்று வேதனை பட்டுகொண்டார்.

இதை கவனத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் மாணவ/மாணவிகளில்,
விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்,
இந்த உதவி தொகை சம்மந்தமான உங்கள் புகார்களை ஆதாரத்தோடு இந்த முகவரிக்கு
ஆங்கிலத்தில் அனுப்புங்கள்

Ministry of Minority Affairs
11th Floor, Paravaran Bhawan
CGO Complex, Lodhi Road
New Delhi - 110 003
 

Copyright All Rights Reserved வழுத்தூர் ஆன்லைன் by Mohamed Brother`s