வழுத்தூர் ஆன்லைன் தமிழ் இணையதளம்

.

மறைவு அறிவிப்பு 11-08-2009 காலை 11.30 மணிக்கு மேல வழுத்தூர் தானாவதி அப்துல் ரசூல் காலமானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்பார்ந்த வழுத்தூர் வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த வழுத்தூர் ஆன்லைன் இணைய தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.
திருமணம், மறைவு மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும் வரவேற்கப்படுகின்றன. வாழ்த்துக்கள், அனுதாபங்கள், சமூக கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவைகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
வழுத்தூர் மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் வட்டார மக்கள் தங்கள் பகுதிகளின் செய்திகளை தெரிந்து கொள்ள உதவுங்கள்.
நம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி


சென்னை அண்ணாநகர் அரசு சித்த மருத்துவக்கல்லூரியில்

சித்தா, ஆயுர்வேதா,
யுனானி, ஓமியோபதி மற்றும் நேச்சுரோபதி ஆகிய ஆறு படிப்புகளுக்கான
விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் நேற்று (13/07/09) துவங்கப் பட்டன.கல்லூரி
முதல்வர் மற்றும் தேர்வுக்குழு செயலர் அப்துல்காதர் மாணவர்களுக்கு
விண்ணப் பங்களை வழங்கினார்.
சித்த மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் குறித்து அப்துல்காதர்
கூறியதாவது: விண்ணப்பங்கள் 13/07/09 இருந்து வினியோகம் செய்கிறோம். ஒரு
விண்ணப் பத்தின் விலை 500 ரூபாய்.

வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய
கடைசி தேதி ஆகஸ்ட் 5ம் தேதி.ஆகஸ்ட் 19ம் தேதி கவுன்சிலிங் நடக்கிறது.
நேற்று ஒருநாளில் மட்டும் 60 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதல் நாளில், குறைந் தளவே மாணவர்கள் வந்திருந்தனர். ஐ.டி., நிறுவனங்களின்
வீழ்ச்சியினால் மாணவர்கள், சித்த மருத்துவக்கல்வியில் சேர்வதற்கு அதிக
ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், இனிவரும் நாட்களில் விண் ணப்பங்களின்
விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு செயலர்
அப்துல்காதர் கூறினார்.
 

Copyright All Rights Reserved வழுத்தூர் ஆன்லைன் by Mohamed Brother`s